ஜெனீவா செல்லும் குழுவுக்கு பாதுகாப்பு: புலிகள்
கொழும்பு:
ஜெனீவாவில் ஏப்ரல் 19ம் தேதி தொடங்க இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கச் செல்லும்புலிகளின் பிரதிநிதிகளுக்கு கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்என இலங்கை அரசுக்கும் நார்வேயிடமும் விடுதலைப் புலிகள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில் நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹைம், புலிகளின்அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தை லண்டனில் சந்தித்துப் பேசினார்.அப்போது கொழும்பு விமான நிலையம் வழியாகச் செல்லும் புலிகளின் குழுவுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என பாலசிங்கம் கேட்டுக் கொண்டார்.
இது குறித்து அடுத்த வாரம் ஜனாதிபதி ராஜக்ஷேவை சந்திக்கும்போது விவாதிப்பதாக எரிக் சோல்ஹைம்உறுதியளித்தார்.
பேச்சுவார்த்தையின் முதல் சுற்றில் ஒப்புக் கொண்டபடி கருணா கும்பலிடம் இருந்து ஆயுதங்களைப் பறிக்கும்பணியை இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை என்பதை நார்வே அமைச்சரிடம் சுட்டிக் காட்டிய பாலசிங்கம்,பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால் முதலில் ஆயுதங்கள் பறிப்பைத் தொடங்க வேண்டும்,வட கிழக்கில் அமைதியை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் தெரிவித்தார்.
ஏப்ரலில் தொடங்கும் பேச்சுவார்த்தையின்போது பாரா மிலிட்டரிப் படைகளிடம் இருந்து ஆயுதங்களைப்பறிப்பது குறித்தே முக்கியமாக விவாதிக்கப் போவதாகவும் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.