For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ வீட்டில் குவிந்தனர் நிர்வாகிகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சிவகாசி தொகுதியில் போட்டியிட தயாராக இருப்பதாக கட்சி நிர்வாகிகளிடம்கூறியிருந்த வைகோ திடீரென போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததால்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று வைகோவை அவரது வீட்டில் சந்தித்த கட்சியின் முக்கியத் தலைவர்கள் அவர்சிவகாசி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

மதிமுக வேட்பாளர் தேர்வின்போது, வைகோ சிவகாசி தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று அனைத்து நிர்வாகிகளும் வலியுறுத்தினர். தொண்டர்கள்தரப்பிலிருந்தும் இக்கோரிக்கை வந்ததால், சரி என்று சம்மதம் சொல்லியுள்ளார்வைகோ.

இந் நிலையில் நேற்றைய பொதுக் கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியாகச் சொல்லிவேட்பாளரை அறிவித்த வைகோ, சிவகாசி என்று சொல்லி நிறுத்தினார். இதையடுத்துவைகோவின் பெயரை எதிர்பார்த்து கூடியிருந்த கூட்டம் பெரும் ஆராவாரம் செய்தது.

ஆனால், வேட்பாளராக ஞானதாஸை அறிவித்தார் வைகோ. இதையடுத்து கூட்டத்தில்பெரும் நிசப்தம் நிலவியது. இதைத் தொடர்ந்து தலைவா போட்டியிடு கோஷயங்கள்கிளம்பின.

மேடையில் அமர்ந்திருந்த மூத்த தலைவர்களாக எல்.கணேசன், கண்ணப்பன், செஞ்சிராமச்சந்திரன் ஆகியோர் வைகோவிடம் சென்று அவரது கையைப் பிடித்துக் கொண்டுபோட்டியிடுமாறு கோரினர்.

மேலும் மாவட்டச் செயலாளர்களும் வைகோவை சுற்றி நின்று கோரிக்கை எழுப்பவே,மேடையை விட்டு இறங்கிச் சென்றுவிட்டார் வைகோ. அவர் பின்னாடியே நிர்வாகிகள்ஓடினர். அவர்களை மேடைக்குப் போகுமாறு திருப்பி அனுப்பிவிட்டார் வைகோ.

இந் நிலையில் இன்று காலை வைகோவின் அண்ணா நகர் வீட்டில் 35 மாவட்டச்செயலாளர்களும் மூத்த தலைவர்களும் வந்து குவிந்தனர். வைகோவை சிவகாசிதொகுதியில் போட்டியிடுமாறு அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், தீவிர பிரசாரம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால்தான் தான்போட்டியிடவில்லை என்று கட்சி நிர்வாகிகளிடம் வைகோ கூறிவிட்டதாகத்தெரிகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் இதே போல வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்தில் வைத்துத் தான் சிவகாசியின் வேட்பாளராக சிப்பிப்பாறை ரவிச்சந்திரனைஅறிவித்துவிட்டு, நான் போட்டியிடவில்லை என வைகோ அறிவித்தார்.

திமுக கூட்டணியின் வெற்றிக்காக தீவிரப் பிரசாரம் செய்யவிருப்பதால் தேர்தலில்போட்டியிடவில்லை என்று அப்போது கூறினார் வைகோ.

ஆனால், சமீபத்தில் ஜெயா டிவிக்கு பேட்டியளிக்கையில், திமுகவிடம் இருந்துஎங்களுக்குக் கிடைத்ததே நாலு சீட் தான். அதனால் தான் போட்டியிடவில்லை என்றார்என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெவுடன் சந்திப்பு:

நேற்று மதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் முதல்வர்ஜெயலலிதாவை வைகோ சந்தித்துப் பேசினார்.

அப்போது, தான் போட்டியிடப் போவதில்லை என்பதை ஜெயலலிதாவிடம் வைகோவிளக்கியதாகத் தெரிகிறது.

திருமாவும் சந்திப்பு:இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், ஐ.என்.டி.யூ.சி.வேட்பாளர்கள் ஜி.காளன், சின்னச்சாமி, மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர ஸ்ரீதர்வாண்டையார் ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X