கருணாநிதி போட்டியிட தடை கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைக்கே செல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளைக் கழித்து விட்ட திமுக தலைவர்கருணாநிதி, இந்த முறை மீண்டும் போட்டியிடுவதை அனுமதிக்கக் கூடாது, அவரதுவேட்பு மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில்ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக கருணாநிதி கடந்த முறைதேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் ஒரு நாள் கூட அவர் சபைக் கூட்டத்தில்கலந்து கொண்டதில்லை.

மேலும், சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்றுஅதிகாரப்பூர்வமாகவும் அறிக்கை மூலம் தெரிவித்தார். இது அரசியல் சட்டத்தைஅவமதிக்கும் செயலாகும். ஜனநாயகத்திற்கு எதிரானது.

மக்கள் ஓட்டுப் போட்டு தங்கள் பிரதிநிதியை சட்டசபைக்கு அனுப்புகிறார்கள். தங்கள்குறைகளை தீர்க்க பாடுபடுவார் என்ற எண்ணத்தில் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆனால் அதைக் கெடுக்கும் விதமாக ஒரு நாள் கூட கருணாநிதி சட்டசபைக்குப்போனதில்லை. தனது பதவியையாவது ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

ஆனால் அதையும் செய்யாமல் பதவிக்காகவும், சம்பளத்திற்காகவும் அவர் சட்டசபைவருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்துப் போட்டுள்ளார்.

எனவே இவர் மனு தாக்கல் செய்தால், அந்த வேட்பு மனுவை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளக் கூடாது, தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்என்று கூறியுள்ளார்.

கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை:

இந் நிலையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் வரும்5ம் தேதி கருணாநிதி ஆலோசனை நடத்துகிறார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்மட்டுமே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டியுள்ளது.

இந் நிலையில், 5ம் தேதி மாலை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிதலைமையில், கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+