தூத்துக்குடியில் திமுகவுக்கு எதிராக சரத் ரசிகர்கள் போட்டி!
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில், திமுக கூட்டணி போட்டியிடும் 7 தொகுதிகளிலும்எதிர்த்துப் போட்டியிட நடிகர் சரத்குமார் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
திமுகவில் ஓரம் கட்டப்பட்டுள்ள சரத்குமார் ரசிகர்களும், இதே காரணத்திற்காக நாடார்சமுதாயத்தினரும் திமுக மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.இந் நிலையில், தனிக் கட்சி தொடங்க வேண்டும் என்று சரத்குமாரை அவரது ரசிகர்கள்வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் தனிக்கட்சி தொடர்பாக இதுவரை சரத்குமார்எதையும் கூறாமல் அமைதியாக உள்ளார்.
இந் நிலையில் குமரி மாவட்ட சரத் ரசிகர்கள் வரும் தேர்தலில் குமரி மாவட்டத்தில்போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
ரஜினி ரசிகர்கள் காரைக்குடியில் கூட்டம் போட்டது போல சரத்குமார் ரசிகர்மன்றத்தினர் இன்று தூத்துக்குடியில் ஆலோசனை நடத்தினர்.
அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடுவதுஎன அம் மாவட்ட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
தங்களை ஓட்டு சேகரிக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்ட திமுக தற்போதுதங்களைக் கைவிட்டு விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே வரும் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக கூட்டணி போட்டியிடும் 7தொகுதிகளிலும் அவர்களை எதிர்த்து ரசிகர்கள் போட்டியிடுவார்கள் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவுக்கு எதிராக ரசிகர்கள் திரண்டு வரும் பின்னணியில் நாளை சென்னையில்சரத்குமார் ரசிகர் தலைமை மன்றத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம்நடைபெறுகிறது.
இதில் தமிழகம் முழுவதும் உள்ள மன்ற நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
அப்போது முக்கிய முடிவுகள், அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications