"குமுதம் வெளியீட்டாளர் பார்த்தசாரதி மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குமுதம் வார இதழை நிறுவியவர்களில் ஒருவரான பி.வி.பார்த்தசாரதி சென்னையில்மரணமடைந்தார்.

குமுதம் வார இதழை நிறுவியர்களில் ஒருவர் பி.வி.பார்த்தசாரதி. அதன் நிறுவனஆசிரியர் எஸ்.ஏ.பார்த்தசாரதிக்குப் பின்னர் கெளரவ பதிப்பாளராக இருந்து வந்தார்.

சில மாதங்களாக பி.வி.பார்த்தசாரதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. 83வயதான அவர் இன்று அதிகாலை சென்னையில் உள்ள அவரது வீட்டில்மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு அமைச்சர் ஜெயக்குமார், எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன்,இந்துமதி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, இந்து ஆசிரியர் ராம், முரளி,காவல்துறை அதிகாரிகள், நடிகர்கள் விக்ரம், எஸ்.வி.சேகர், பல்வேறு அரசியல்தலைவர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் ஜெயலலிதா பார்த்தசாரதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து செய்திவெளியிட்டுள்ளார். பார்த்தசாரதியின் உடல் செவ்வாய்க்கிழமை தகனம்செய்யப்படுகிறது.

1925ம்ஆண்டு பிறந்த பார்த்தசாரதி, வழக்கறிஞர் ஆவார். 1947ம் ஆண்டு குமுதம்பத்திரிக்கையை இவரும், எஸ்.ஏ.பார்த்தசாரதியும் சேர்ந்து தொடங்கினர். இவர்பதிப்பாளராக பணியாற்றினார், எஸ்.ஏ.பார்த்தசாரதி ஆசிரியராக இருந்தார்.பி.வி.பார்த்தசாரதிக்கு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+