அதிமுக எம்எல்ஏ சுயேச்சையாக போட்டி
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாகர்கோவில் தொகுதியில்சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக தற்போதைய அதிமுக எம்எல்ஏ ஆஸ்டின்அறிவித்துள்ளார்.
நாகர்கோவில் தொகுதியில் தற்போது அதிமுகவைச் சேர்ந்த ஆஸ்டின் எம்எல்ஏவாகஉள்ளார். வருகிற தேர்தலில் இத்தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால்ஆஸ்டின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆஸ்டின் சுயேச்சையாக மீண்டும் போட்டியிட வேண்டும் என்று அவரதுஆதரவாளர்கள் ஆஸ்டினை வற்புறுத்தி வருகின்றனர். இதை ஏற்றுள்ள ஆஸ்டின்சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், எனது ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி மக்களின்கோரிக்கையை ஏற்று நான் நாகர்கோவில் தொகுதியில் சுயேச்சையாகப்போட்டியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications