சென்னையில் "கேப்டன்:அணல் பறக்கும் பிரசாரம்
சென்னை:
சென்னை புறநகர்ப் பகுதிகளில் நடிகர் விஜயகாந்த் இன்று தீவிரப் பிரசாரம்மேற்கொண்டார்.
சட்டசபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் முன்பே பிரசாரத்தைத்தொடங்கி விட்டார் விஜயகாந்த்.கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை முடித்து விட்ட விஜயகாந்த்தற்போது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறார். முதல் கட்டமாக 140தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மீதள்ள பட்டியலும் விரைவில்வெளியாகி விடும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் தனது 3வது கட்ட பிரசாரத்தை சென்னை புறநகர் பகுதிகளில்விஜயகாந்த் துவக்கினார். காலை 10 மணியளவில் புழுதிவாக்கம், மடிப்பாக்கம்,கீழ்க்கட்டளை, மேடவாக்கம், சோழிங்கநில்லூர், கேளம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்டபகுதிகளில் பிரசாரம் செய்து பேசினார்.
வழக்கம் போல திமுக, அதிமுகவை விமர்சித்த விஜயகாந்த், எனக்கு ஒரு வாய்ப்புகொடுத்துப் பாருங்கள். நல்லாட்சி நடத்துகிறேனா என்று பாருங்கள். அப்படிநடத்தவில்லை என்று தெரிந்தால் என்னையும், எனது ஆட்சியையும் தூக்கி வீசிஎறியுங்கள் என்று ஆவேசமாக பேசினார்.
விஜயகாந்த்தின் இந்தப் பிரசாரங்களின்போது பெரும் திரளான மக்கள் கூடி நின்றுவிஜயகாந்த்தின் பேச்சைக் கேட்டனர். தொடர்ந்து திருப்போரூர், திருக்கழுக்குன்றம்,மகாபலிபும், புதுப்பட்டினம், கல்பாக்கம், உத்திரமேரூர், உள்ளிட்ட பல்வேறுபகுதிகளிலும் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications