ஜெயேந்திரரை கைது செய்ய பிடிவாரண்ட் !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு விசாரணையில் ஆஜராகாதஜெயேந்திரருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை தன்மை அமர்வு நீதிமன்றம்உத்தரவிட்டது.

ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியதாக ஜெயேந்திரர், ரவி சுப்பிரமணியம், அப்பு,கதிரவன் உள்ளிட்டோர் மீது சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரவி சுப்பிரமணியம்உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். கதிரவன், அப்பு ஆகியோரை போலீஸார்ஆஜர்படுத்தவில்லை.

இதுதொடர்பாக போலீஸார் தாக்கல் செய்த மனுவில், கடலூர் மாவட்டத்தில் முதல்வர்ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதனால் பாதுகாப்பு காரணங்களைக்கருதி இருவரையும் ஆஜர்படுத்த முடியவில்லை என்று தெரிவித்திருந்தனர். இதைநீதிபதி செல்வக்குமார் ஏற்றுக் கொண்டார்.

முக்கியக் குற்றவாளியான ஜெயேந்திரர் சார்பில் அவரது வழக்கறிஞர் ஒரு மனுவைத்தாக்கல் செய்தார்.

அதில் ஜெயேந்திரர் பூஜையில் இருப்பதால் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை என்றுதெரிவித்திருந்தார். ஆனால் இந்தக் காரணத்தை ஏற்க மறுத்த நீதிபதி, உடனடியாகஜெயேந்திரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கூறி, ஜாமீனில்வெளிவரக் கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

பின்னர் வழக்கு விசாரணை வருகிற 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+