ஆண்டிப்பட்டியில் ஜெவுக்கு எதிராக முருகவேல்ராஜன்
சென்னை:
பாமகவிலிருந்து விலகி, அதிமுகவில் சேர்ந்து சீட் கிடைக்காமல் ஏமாற்றத்துக்குஆளான முன்னாள் எம்.எல்.ஏ.முருகவேல்ராஜன் ஜெயலலிதாவை எதிர்த்துஆண்டிப்பட்டியில் போட்டியிடுகிறார்.
தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு பாமகவிலிருந்து விலகியவர்முருகவேல் ராஜன்.முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார். ஆனால், அவருக்கு சீட்கொடுக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து மக்கள் விடுதலைக் கட்சி என்ற பெயரில் புதுக் கட்சியைத்தொடங்கினார். இந்தக் கட்சி சமூக நீதிக் கூட்டணி என்ற பெயரில், ஆதி தமிழர்ஜனநாயக முன்னணி உள்ளிட்ட சில தலித் கட்சிகளுடன் இணைந்து கூட்டணிஅமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது.
தனது கட்சியின் சார்பில் போட்டியிடும் 27 வேட்பாளர்களின் பெயரை மதுரையில்இன்று செய்தியாளர்களிடம் முருகவேல்ராஜன் வெளியிட்டார்.
அதில் ஆண்டிப்பட்டியில் மதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து தான் போட்டியிடுவதாகஅறிவித்தார். மேலும், சமயநில்லூர் (தனி) தொகுதியிலும் தான் போட்டியிடப்போவதாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications