பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்

Subscribe to Oneindia Tamil

பழனி:

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகுதண்டாயுதபாணி திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாகநடந்தேறியது.

முருகனின் அறுபடை வீடுகளில் 3வது வீடு பழனி. இங்குள்ள அருள்மிகுதண்டாயுதபாணி திருக்கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.

இதற்காக ரூ. 5 கோடி செலவில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டிருந்தன. கடந்த31ம் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கின. 1ம் தேதி யாக சாலை வேள்விகள்தொடங்கின.

கஜ பூஜை, கோ பூஜை உள்ளிட்டவை நடத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை இரவுமகாலட்சுமி பூஜை நடந்தது. பின்னர் 9 சுமங்கலிப் பெண்களை வைத்து வழிபாடுநடந்தது.

இந்தப் பூஜைகளில் மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம், கவுமார மட ஆதீனம்உள்ளிட்டோரும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இன்று காலை 6.30 மணிக்கு 4ம் கால வேள்வி தொடங்கியது. திருமேனித் தூய்மை,மங்கல நாண் அணிவித்தல், பல்பொருள் வேள்வி முதலியவை நடந்தன.

காலை 9.45 மணிக்கு திருக்குடங்கள் ஞானத் திருவுலா நடந்தது.

பத்து மணிக்கு மூலவர் தங்க விமானம், ராஜகோபுரம, பரிவார கோபுரங்களுக்குதிருக்குட புனித நீராட்டு நடந்தது.

10.15 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமிக்கு திருக்குட நன்னீராட்டு நடந்தது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேகத்தைக் காண கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர்தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். இன்று மாலைசண்முகர், வள்ளி-தெய்வானை திருக் கல்யாணம், கிரி வீதியில் முத்துக்குமாரசுவாமிவீதியுலாவும் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தின்பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்புப் பேருந்து போக்குவரத்து வசதிகள்செய்யப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+