புதுவை கூட்டணி: டெல்லியில் திமுக-காங் பேச்சு
டெல்லி:
புதுவையில் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன்திமுக சார்பில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணிக்கான தொகுதி உடன்பாடுமுடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர். அதேபோல புதுவையிலும்கூட்டணி ஏற்படுத்த காங்கிரஸ் முயன்று வருகிறது.புதுவையைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி பெரிய கட்சிஎன்பதால் அக்கட்சியின்கூட்டணியில் இடம்பெற திமுக, பாமக ஆகியவற்றுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுக்களைதொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக டெல்லியில் இன்று காலை சோனியா காந்தியின் வீட்டில் புதுவைதேர்தல் உடன்பாடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு இடையேபேச்சுவார்த்தை நடந்தது.
காங்கிரஸ் சார்பில் முதல்வர் ரங்கசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் சண்முகம்,முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் தயாநிதி மாறன் பங்கேற்றார். பேச்சுவார்த்தை சுமூகமாகமுடிந்ததாகவும், இன்று மாலை மீண்டும் பேசவுள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது தொகுதி உடன்பாடு ஏற்பட்டவிடும் எனத் தெரிகிறது. 30 தொகுதிகளைக் கொண்ட புதுவை சட்டசபைக்கு மே 3மற்றும் 8 ஆகிய நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications