திமுக வேட்பாளரின் இந்தி பிரசாரம்!!!!
ஈரோடு:
ஈரோடு சட்டசபைத் தொகுதி திமுக வேட்பாளர் என்.கே.பி.பி.ராஜா வடமாநிலத்தவர்கள் வாழும் பகுதியில் இந்தியில் பிரசார துண்டுப் பிரசுரங்களைவினியோகித்து வருவதை அதிமுகவினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திராஜாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
மொத்தமாக 100 ஓட்டு இருந்தால், அந்த ஓட்டுக்களைப் பெற என்ன வழியெல்லாம்உள்ளதோ அதை செய்து முடிப்பது வேட்பாளர்களின் தேர்தல் நேர கலாட்டாக்களில்ஒன்று.தேர்தல் நேரங்களில் வெளி மாநிலத்தவர்களின் ஓட்டுக்களைப் பெற அந்தமாநிலத்தவர்களின் பாஷையில் பேசி ஓட்டுக் கேட்பது, அந்தப் பாஷையில் துண்டுபபிரசுரங்களை அடித்து வாக்கு சேகரிப்பது என பல முயற்சிகளில் இறங்குவார்கள்வேட்பாளர்கள்.
அப்படித்தான் இறங்கப் போய் இப்போது தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளார் ஈரோடுசட்டசபைத் தொகுதி திமுக வேட்பாளர் என்.கே.பி.பி.ராஜா.
ஈரோடு இந்திரா நகர் பகுதியில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்துவருகின்றனர். கணிசமான வாக்கு வங்கியான இப்பகுதியில் வாக்குகளைக் கவரஅப்னா ஓட்.. டி.எம்.கே கூ தீஜியே... என இந்தியில் துண்டுப் பிரசுரங்களை அடித்துஇந்திரா நகர் முழுவதும் வினியோகித்துள்ளார் ராஜா.
இதை அதிமுக கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டுஎதிர்மறைப் பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்தி எதிர்ப்பை ஒரு கொள்கையாகவே வைத்துள்ள திமுக, இப்போது ஓட்டுக்காககொள்கையை காற்றில் பறக்க விட்டு முழுக்க முழுக்க இந்தியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுண்டுப் பிரசுரங்களை வினியோகிப்பது எந்த ஊர் நியாயம்? என்று அதிமுகவினர்கேள்வி எழுப்பி தங்களது பிரசாரங்களில் திமுகவை வாரி வருகின்றனர்.
இதனால் திமுக தரப்பு தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது.
TAMILNADU NEWS | INDIA NEWS |
[an error occurred while processing this directive] |