தலித் அதிகாரிகளை ஓரங்கட்டிய ஜெ-ப.சி தாக்கு

Subscribe to Oneindia Tamil

காட்டுமன்னார்கோவில்:

ஜெயலலிதாவின் ஆட்சியில் தலித் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி தராமல் காத்திருப்போர் பட்டியலில்வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் பதவி இல்லாமல் வீட்டில் இருக்கின்றனர் என மத்திய நிதியமைச்சர்ப.சிதம்பரம் கூறினார்.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சிதம்பரம் கூறியதாவது:

கருணாநிதி ஆட்சியில் தொழில்துறை பெருக்கம் ஏற்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் எந்தத் தொழிற்சாலையும்இங்கு வரவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டிய ஒன்று.

ஏனென்றால், 5 வருடத்தில் 5 தலைமைச் செயலாளர்கள், 4 உள்துறைச் செயலாளர்கள், 5 டிஜிபிக்கள், 9தொழிற்துறை அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள். இது கோமாளி ஆட்சியா இல்லையா?

ஜெயலலிதாவின் ஆட்சியில் தலித் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி தராமல் காத்திருப்போர் பட்டியலில்வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் பதவி இல்லாமல் வீட்டில் இருக்கின்றனர்.

2 தலித் அதிகாரிகளுக்கு கலெக்டர் அந்தஸ்து இருந்தும் அவர்களை கலெக்டர் பதவியில் ஜெயலலிதாஅமர்த்தாதது ஏன்? தலித்களுக்கு பல கொடுமைகளைச் செய்துவிட்டு இப்போது திருமாவளவனுடன் கூட்டுசேர்ந்து அதை மறைக்கப் பார்க்கிறார் ஜெயலலிதா.

சேது சமுத்திரத் திட்டம வரவே கூடாது என்று வாதாடிய ஜெயலலிதாவுடன் எப்படி வைகோ கூட்டு சேர முடிந்ததுஎன்று கேட்டார் சிதம்பரம்.

TAMILNADU NEWS INDIA NEWS
[an error occurred while processing this directive]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+