விருத்தாலம் என்ன இளிச்சவாய ஊரா?: திருமா
விருத்தாசலம்:
விருத்தாசலத்தைச் சேர்ந்தவர்களை விஜய்காந்த் இளிச்சவாயர்கள் என நினைத்துவிட்டார் போலும் எனவிடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
விருத்தாசலத்தில் திருமாவளன் பேசியதாவது:விருத்தாசலத்தில் போட்டிபோடும் விஜய்காந்த்துக்கு டெபாசிட் கூட கிடைக்காது. அவரது கட்சி 234இடங்களிலும் டெபாசிட் இழப்பது உறுதி. விருத்தாசலத்தைச் சேர்ந்தவர்கள் இளிச்சவாயர்கள் என விஜய்காந்த்நினைத்துவிட்டாரா?
பேசாமல் விருதாச்சலத்தை கேன்சல் செய்துவிட்டு உங்கள் சொந்த ஊரான மதுரைப் பக்கம் எங்கோயவது போய்விடுங்கள். இல்லாவிட்டால் சினிமாவுக்கே திரும்பிவிடுங்கள். அதை வைத்து குடும்பத்தையாவது காப்பற்றலாம்.
பண்ருட்டியார் பேச்சைக் கேட்டு விருத்தாசலத்தில் நிற்கிறார் விஜய்காந்த். உங்களை மலை உச்சியில் இருந்துஉருட்டி விடப் போகிறார் பண்ருட்டி என்றார்.
அறிவுமதி எச்சரிக்கை:
இதற்கிடையே தமிழக சிந்தனையாளர் பேரவை சார்பில் கடலூரில் நடந்த இலக்கிய விழாவில் பேசிய கவிஞர்அறிவுமதி,
திரைப்படம் மூலம் தமிழைக் கொச்சைப்படுத்தியவர் விஜய்காந்த். தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்தவர், விமர்சித்தவர்.
தமிழ்ப் பண்பாட்டை படங்களில் பதிவு செய்த இந்த மண்ணின் மைந்தன் தங்கர்பச்சான வருத்தம் தெரிவித்தும்கூட நியாயமற்ற முறையில் வட நாட்டு நடிகையிடம் மன்னிப்பு கேட்க வைத்தவர் இந்த விஜய்காந்த்.
தமிழர்களின் எதிரியான அவரை ஜெயிக்க வைத்தால் தமிழர்கள், கடலூர் மாவட்டத்தைக் காறித் துப்புவார்கள்.எந்தக் கட்சியில், எந்த சாதியில் வேண்டுமானாலும் இருங்கள்.
ஆனால், நடிகர்-நடிகையின் எலி வளைக்குள் நெல் தேடும் வாழ்க்கையை வாழாதீர்கள். இந்த முறையும் நீங்கள்ஏமாந்துவிடாதீர்கள் என்றார்.
விஜய்காந்த் பதில்:
இதற்கிடையே தஞ்சாவூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜய்காந்த் நிருபர்களிடம் பேசுகையில்,
நான் ஜாதியைப் பார்த்து விருத்தாசலத்தில் போட்டியிடவில்லை. என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம். தமிழன்என்ற முறையில் தான் அங்கு போட்டியிடுகிறேன் என்றார்.
TAMILNADU NEWS | INDIA NEWS |
[an error occurred while processing this directive] |