ரமணா விஜயகாந்த்தின் புள்ளி விவர பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

திட்டக்குடி:

மத்திய அரசு தரும் ஒரு ரூபாயில் 13 பைசாவை மட்டுமே மக்களுக்காகசெலவிடுகிறார்கள். மீதமுள்ள 87 பைசாவை கொள்ளையடித்து விடுகிறார்கள் என்றுபுள்ளி விவரங்களுடன் பேசி ஓட்டு கேட்டார் ரமணா விஜயகாந்த்.

மங்களூர் தொகுதி தே.மு.தி.க.வேட்பாளர் துரை.மகாதேவனை ஆதரித்து பல்வேறுபகுதிகளில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது விஜயகாந்த்பேசுகையில்,

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஓட்டுப் போடுவதை நிறுத்தினால்தான் லஞ்ச,ஊழல் ஒழியும். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் திமுக ஐந்து ஆண்டுகளும்,அதிமுக ஐந்து ஆண்டுகளும் பதவியில் இருந்து விட்டன.

இந்த முறை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். அதன் பிறகு எனது நல்லாட்சியைப்பாருங்கள். நான் ஒரு முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்து விட்டால் அடுத்த 50ஆண்டுகளுக்கு என்னை யாராலும் அகற்ற முடியாது.

மத்திய அரசு தரும் ஒரு ரூபாயில் 13 பைசாவை மட்டுமே மக்களுக்காகசெலவிடுகிறார்கள். மீதமுள்ள 87 பைசாவை கொள்ளையடித்து விடுகிறார்கள். இந்தபகாசுர ஊழலை ஒழித்தால்தான் 50 சதவீத நிதியாவது உங்களை வந்தடைய முடியும்.

இப்போது எல்லோரும் ஏகப்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கிறார்கள். 2ரூபாய்க்கு அரிசி, கலர் டிவி என்று திமுக கூறுகிறது. இவையெல்லாம் விஜயகாந்த்வந்த பின்னர் ஏற்பட்ட பயத்தால்தான் அறிவிப்புகளாக வெளியாகியுள்ளன என்றார்விஜயகாந்த்.

TAMILNADU NEWS INDIA NEWS
[an error occurred while processing this directive]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+