ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு வைகோ மீது தயாநிதி மாறன் வழக்கு
சென்னை:
தன்னுடைய பெருமைக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் பேசி வரும்மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ரூ. 1 கோடி இழப்பீடு தர உத்தரவிடக் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வழக்குதொடர்ந்துள்ளார்.
சென்னையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய வைகோ, ராஜ் டிவியின்உரிமம் ரத்து செய்யப்பட்டதற்கும், ஜெயா டிவியின் டெலிபோர்ட் உரிமம் கிடைக்கதாமதம் ஏற்பட்டுள்ளதற்கும் தயாநிதி மாறனே காரணம் என்று குற்றம் சாட்டினார்.மேலும் சன் டிவிக்கு ரூ. 10 கோடியளவுக்கு பிஎஸ்என்எல் விளம்பரங்கள்தரப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு தயாநதி மாறன் மறுப்பு தெரிவித்து, வைகோ மீது வழக்கு தொடருவேன் என்றுஅறிவித்தார். ஆம்பளையாக இருந்தால் வழக்குப் போடு என்று வைகோவும்,நீயெல்லாம் மீசை வச்ச ஆம்பளையா, ஒண்டிக்கு ஒண்டி வர்றியா என்று தயாநிதிமாறனும் கேட்டு சண்டையிலும் ஈடுபட்டு வந்தனர்.
தொலைக்காட்சிகள் தொடர்பான அனுமதியைத் தரும் தகவல் ஒளிபரப்புத்துறை எனது வசமே இல்லை, அதைகவனிப்பது ப்ரியரஞ்சன் தாஸ் முன்ஷி. ஆனால், என் மீது வேண்டும் என்றே தவறான குற்றம் சாட்டி வருகிறார்வைகோ என தயாநிதி விளக்கமளித்திருந்தார்.
இந் நிலையில் வைகோ மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் வழக்குதொடர்ந்துள்ளார். அந்த மனுவில்,
சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறிவைகோ பேசியுள்ளார். ராஜ் டிவிக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது, ஜெயாடிவிக்கான டெலிபோர்ட் வசதியைப் பயன்படுத்துவதற்கான உரிமம் வழங்குவதுஉள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களை வைகோ கூறியுள்ளார்.
இவை அனைத்தும் ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுக்கள் (தனித்தனியாகஇவற்றுக்கு தயாநிதி மாறன் விளக்கம் அளித்துள்ளார்).
எனவே எனது பெருமைக்கும், புகழுக்கும் களங்கம் விளைவித்துள்ள வைகோ ரூ. 1கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். தொடர்ந்து என்னைப் பற்றிஅவதூறாகப் பேசுவதற்கும் தடை விதிக்க வேண்டும்.
வைகோவின் பேச்சை வெளியிட்ட தினமலர் பதிப்பாளர், ஆசிரியர் ஆகியோரும்,ஜெயா டிவியும் தலா ரூ. 1லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றுகோரியுள்ளார் தயாநிதி மாறன்.












Click it and Unblock the Notifications