கண்ணகியும் ஜெவும்: இளங்கோவன் கிண்டல்
திருப்பூர்:
ரூ. 1,500க்கு சைக்கிள் தர ஜெயலலிதாவால் முடிந்தால் ரூ. 2,000த்தில் கலர் டிவி தர கருணாநிதியால் முடியாதா?என்று மத்திய இணையமைச்சர் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூரில் கூட்டணிக் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் இளங்கோவன் பேசுகையில்,எம்பி தேர்தலில் தோற்ற பிறகும் ஜெயலலிதா திருந்தவில்லை. கண்ணகி சிலையை ஏன் ஜெயலலிதா தூக்கிஎறிந்தார்..? ஜெயலலிதா செய்ய முடியாததை செய்தவர் கண்ணகி.
மத்திய அமைச்சர்கள் எந்த உதவியும் செய்யவில்லை என்கிறார் ஜெயலலிதா. மைசூர்-சாம்ராஜ்பேட்டை வழியாகதமிழகத்துக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில், கர்நாடக எல்லை வரை சர்வே பணிகள் முடிந்துவிட்டன.
ஆனால், தமிழக வனப் பகுதியில் உள்ள 11 கி.மீ. தூரத்தில் எந்தப் பணியில் இன்னும் தொடங்கவில்லை.
ரூ. 1,500க்கு சைக்கிள் தர ஜெயலலிதாவால் முடிந்தால் ரூ. 2,000த்தில் கலர் டிவி தர கருணாநிதியால் முடியாதா?
முதலில் மக்களுடன் தான் கூட்டணி என்ற ஜெயலலிதா பின்னர் கதவு திறந்தே இருக்கிறது என்றார். திறந்திருந்தவீட்டில் வைகோ போய் நுழைந்துவிட்டார்.
அலிபாபாவும் 40 திருடர்களும் மாதிரி மிக ஆழமான குகையில் நுழைந்துவிட்டார் வைகோ. இனி அவரால்வெளியில் வரவே முடியாது என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications