12 இலங்கை கடற்படையினர், 2 போலீசார் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை திரிகோணமலையில் கடற்படை வீரர்கள் சென்ற பேருந்து கண்ணி வெடியில் சிக்கியதில் 12 பேர்பலியாயினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
திரிகோணமலை துறைமுகம் அருகே நேற்று இச் சம்பவம் நடந்தது. இந்தப் பேருந்து வெடித்துச் சிதறியபோதுஎதிரே வந்த வேனும் சேதமடைந்தது. அதிலிருந்த 2 சுற்றுலாப் பயணிகளும் காயமடைந்தனர்.இந் நிலையில் இன்று திரிகோணமலையில் போலீசார் சென்ற வாகனம் கண்ணி வெடியில் சிக்கி இரு காவலர்கள்பலியாயினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
வரும் 19ம் தேதி மீண்டும் ஜெனீவாவில் புலிகள்- இலங்கை அரசு இடையே பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளநிலையில் இச் சம்பவங்கள் நடந்துள்ளன.












Click it and Unblock the Notifications