அதிமுகவில் சேருவார் சரத்குமார்: வைகோ
திருவாரூர்:
திமுகவிலிருந்து விலகியுள்ள நடிகர் சரத்குமார் விரைவில் அதிமுகவில் சேர்ந்தார்என்ற தகவல் வரும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரப் பிரசாரம் செய்த வைகோதனது பிரசாரக் கூட்டங்களில் பேசுகையில்,திரை உலகில் சுப்ரீம் ஸ்டாராக விளங்கி வரும் சரத்குமார், திமுகவிலிருந்துவிலகியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அவர் அதிமுகவில் சேர்ந்தார்என்ற தகவலும் வரும்.
தினம் ஒரு நல்ல தகவல் உங்களுக்கு கிடைக்கும்.
கொத்தடிமைகளுக்குத்தான் திமுகவில் இடம். அதை சரியாக சொல்லியுள்ளார்சரத்குமார், சரியான சமயத்தில் வெளியேறியுள்ளார்.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். கலைஞரின் அறிவிப்புகளை கேட்டமாத்திரத்தில்இது பொய், பொய் சொல்கிறார் கலைஞர் என்கிறார்கள்.
2 ரூபாய்க்கு அரிசி, கலர் டிவி, இலவச எரிவாயு அடுப்பு, இவற்றை எல்லாம் நம்பமக்கள் முட்டாள்கள் அல்ல. 2 ரூபாய்க்கு அரிசி கொடுக்க முடியும் என்றால் அதைஏன் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் கொடுக்க வண்டும், இப்போதே உங்களதுசெல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய அரசிடமிருந்து மானியத் தொகையைப் பெற்றுமாநில அரசுக்கு கொடுத்து அரிசி விலையைக் குறைக்க உதவலாமே?
அப்போ, மக்கள் நலன் உங்களுக்குமுக்கியமல்ல, ஆட்சிக்கு வருவதுதான்முக்கியமாகப் போய் விட்டது அப்படித்தானே?
இப்படிக் கூறினால் ஏதோ சில தொகுதிகளிலாவது வெற்றி பெறலாமேஎன்பதற்காகத்தான் இப்படிக் கூறுகிறார் கலைஞர்.
கலர் டிவி கொடுக்கிறீர்களே, கேபிள் இணைப்பும் தருவீர்களா என்று கேட்டால்,தேவைப்பட்டால் அதையும் கொடுப்போம் என்கிறார் கலைஞர். அதாவது கேபிள்இணைப்பையும் கொடுத்து கூடுதலாக 500 கோடி ரூபாயை சுருட்டலாமே!
நான் கேட்கிறேன், கேபிள் இணைப்பை 10 ரூபாய்க்கு கொடுக்கத் தயாரா? என்றார்வைகோ.












Click it and Unblock the Notifications