ஜெ. பச்சை குத்துடன் இந்திரகுமாரி பட்டபாடு!
சென்னை:
அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைய வந்த முன்னாள் அமைச்சர்இந்திரகுமாரியின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவம்சலசலப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. இலவசசெருப்பு, வேட்டி, சேலை வழங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக இந்திரகுமாரி மீதுகடந்த திமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிறைவாசம்அனுபவித்து வெளியே வந்தார் இந்திரகுமாரி.இந் நிலையில் தனது ஆதரவாளர்களோடு இந்திரகுமாரி நேற்று திமுகவில்இணைந்தார். அண்ணா அறிவாலயத்திற்கு வந்த இந்திரகுமாரி, அதன் வளாகத்தில்உள்ள கலைஞர் அரங்கத்தின் வாசலில் நின்று கொண்டு உடன் வந்த அனைத்துப்பெண்களையும் அரங்கத்திற்குள் அனுப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது வலது கையைப் பார்த்த பலரும் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டனர். காரணம் பளிச்சென தெரிந்த ஜெயலலிதாவின் பச்சை குத்தப்பட்ட படம்.
இதை சிலர் இந்திரகுமாரியிடம் எடுத்துக் கூறவே, அவரும் பதறிப் போய் கையைமறைத்துக் கொண்டார். பின்னர் ஒருவர் பிளாஸ்டர் வாங்கிக் கொண்டு வந்தார்.
அதை ஜெயலலிதாவின் படத்தின் மீது ஒட்டிய இந்திரகுமாரி, நிகழ்ச்சி முடிந்துவெளியேறும் வரை கையை புடவையால் மறைக்க பெரும்பாடு பட்டார்.