தமிழகம் முழுக்க கி.வீரமணி பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும்பிரசாரம் செய்யப்போவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கட்சியை ஆதரிக்கும் கி.வீரமணி இந்த முறை திமுககூட்டணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் கி.வீரமணி பேசுகையில், வரும் 18ம் தேதி எனது தேர்தல்பிரசாரத்தைத் தொடங்குகிறேன். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில்எனது பிரசார இயக்கம் தொடங்குகிறது.

மக்கள் விரோத அதிமுக அரசின் அலங்கோலங்களைக் கூறி திமுக கூட்டணிக்காகவாக்கு சேகரிக்க உள்ளேன். வருகிற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிசிறந்த வெற்றியைப் பெறும் என்றார் வீரமணி.

அதிகாரியை மாற்ற கோரும் தேமுதிக:

இதற்கிடையே ஓசூர் தொகுதி தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும்என்று கோரி விஜயகாந்த்தின் தேசியமுற்போக்கு திராவிட கழக வேட்பாளர் சந்திரன்தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ஓசூர் தொகுதி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சப்கலெக்டர் அனந்தகுமார் மீது எனது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றஅவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் அனந்தகுமாரை நீதிமன்றம்கண்டித்து ஒரு மாத சாதாரண சிறைத் தண்டனையும் விதித்தது.

எனவே அவர் தேர்தல் அதிகாரியாக நீடித்தால் என் மீது பாரபட்சமாக நடக்கக் கூடியவாய்ப்புகள் உள்ளன. எனவே அதிகாரி அனந்தகுமாரை ஓசூர் தொகுதி தேர்தல்அதிகாரி பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என்று கோரியுள்ளார் சந்திரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+