தேர்தலில் போட்டியிடும் அல்-உம்மா தீவிரவாதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அல்-உம்மாதீவிரவாதிக்கு பட்டுக்கோட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் தெளபீக். இவர் அல் உம்மாஅமைப்பைச் சேர்ந்தவர். தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் பட்டுக்கோட்டைபோலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள தெளபீக் திருச்சி சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.இந் நிலையில் தான் சட்டசபைத் தேர்தலில் பாளையங்கோட்டையில் போட்டியிடவிரும்புவதாகவும், வேட்பு மனு தாக்கல் செய்ய தனக்கு அனுமதி அளிக்க வேண்டும்என்றும் கோரி பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் தெளபீக் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தெளபீக் பாளையங்கோட்டை தொகுதியில்போட்டியிட அனுமதி வழங்கியும், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வசதியாகஅவரை திங்கள்கிழமை சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டைஅழைத்துச் சென்று பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கலாம் என்றும் நீதிபதிஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications