அன்பரசு மீது செக் மோசடி-மிரட்டும் போத்ரா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசு மீது விரைவில் செக்மோசடி வழக்கு தொடரப் போவதாக சென்னை திரைப்பட பைனான்சியர் குல்சந்த்போத்ரா மீண்டும் மிரட்டியுள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் எம்.பியான அன்பரசுவின் மகன் அருள் அன்பரசு சோளிங்கர்தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக அங்குள்ளகாங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந் நிலையில், அன்பரசு மற்றும் அவரது குடும்பம் தன்னிடம் ரூ. 35 லட்சம் பணத்தைமோசடி செய்து விட்டதாக பைனான்சியர் போத்ரா பரபரப்பு புகார் கூறினார்.இப்புகாரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அவர் அனுப்பி வைத்தார்.

ஆனால் அன்பரசு இப்புகாரை மறுத்தார். மேலும் தனக்கு செல்போன் மூலம் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக அருள் அன்பரசுவும் புகார் கூறினார்.

இந் நிலையில் குல்சந்த் போத்ரா இன்னொரு புகாரை வெளியிட்டுள்ளார்.செய்தியாளர்களிடம் போத்ரா கூறுகையில்,

அன்பரசு, அருள் அன்பரசு ஆகியோர் மீது நான் பண மோசடி புகார் கூறியதைத்தொடர்ந்து அன்பரசு தரப்பினர் ரூ. 35 லட்சம் பணத்திற்கான காசோலையைவழங்கினர். இதை நான் வங்கியில் போட்டேன். ஆனால் அவர்களது வங்கிக்கணக்கில் பணமில்லாத காரணத்தால் காசோலை திரும்பி வந்து விட்டது.

எனவே பண மோசடி செய்ததோடு, வங்கியில் பணமில்லாத நிலையில்காசோலையைக் கொடுத்ததற்காக அன்பரசு குடும்பத்தினர் மீது செக் மோசடி வழக்கைவிரைவில் தொடரவுள்ளேன் என்றார் போத்ரா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+