தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப் படியை (டியர்னஸ் அலவன்ஸ்-டி.ஏ) தமிழக அரசுஉயர்த்தியுள்ளது.
கடைசியாக கடந்த ஆண்டு ஜூலையில் தான் டி.ஏ. 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.இந் நிலையில் கடந்த ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களின் டி.ஏ. 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஆனால்,உடனடியாக தமிழக அரசும் அதை உயர்த்தவில்லை. அதை உயர்த்துமாறு அரசு ஊழியர்கள் கோரிக்கைவிடுத்தன.
இதற்கிடையே தேர்தல் அறிவிப்பும் வெளியானதால் தமிழக அரசால் அதை உயர்த்த முடியவில்லை. அதுதொடர்பான உத்தரவுக்கு தேர்தல் கமிஷனின் அனுமதி கோரப்பட்டது.
கமிஷன் அனுமதி வழங்கியதையடுத்து இப்போது தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான டி.ஏவை 3சதவீதம் உயர்த்தி தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது ஜனவரி மாதம் முதலே முன் தேதியிட்டு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 90 முதல் அதிகபட்சம் ரூ. 1,500 வரை கூடுதல் ஊதியம் கிடைக்கும்.
இந்த டி.ஏ உயர்வு ஓய்வூதியதாரர்களுக்கும் அமல்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications