ஜெவின் தோல்வி பய அரிசி: கிருஷ்ணசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தோல்வி பயம் காரணமாகவே 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்நாகநிாதன், சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதி ஆகியோரைஆதரித்து கிருஷ்ணசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக தேர்தல் அறிக்கையில்கூறப்பட்டுள்ள கிலோ அரிசி 2 ரூபாய் என்ற அறிவிப்புக்கு மக்கள் மத்தியில்வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளதைப் பார்த்து ஜெயலலிதா பயந்து விட்டார்.
தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம் அவரை ஆட்ட ஆரம்பித்துவிட்டது.இதனால் தான் எம்ஜிஆர் சிலைக்கு கீழே நின்று 10 கிலோ அரிசி இலவசம் என்கிறார்.ஜெயலலிதாவின் இந்த ஸ்டண்டை மக்கள் நம்பவே மாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என்றார்கிருஷ்ணசாமி. (தேர்தலுக்கு முன்னரே வெளியிட முடிவு செஞ்சீங்களே..)












Click it and Unblock the Notifications