அரிசி: தோல்வி பயத்தில் ஜெ- எதிர்க் கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவித்த திமுகவை விமர்சித்து வரும்வைகோவுக்கு, 10 கிலோ அரிசி இலவசம் என்று கூறி ஜெயலலிதா சரியானமூக்கறுப்பு செய்துள்ளார் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கருணாநிதி செய்தியாளர்களிடம்பேசுகையில்,

திமுகவின் தேர்தல் அறிக்கையில், 2 ரூபாய்க்கு கிலோ அரிசி என்றோம். அதைஅதிமுகவும், அவர்களுடைய புதிய தோழர் மதிமுகவும் கடுமையாக விமர்சித்தனர்.இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று ஏளனம் பேசினர்.

இப்போது 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அம்மையார்அறிவித்துள்ளார்.

இது ஒரு கொள்கை முடிவு அல்ல, பயனற்ற அறிவிப்பு, ஏமாற்று வேலை.

கிலோ அரிசி 2 ரூபாய் என்று திமுக கூறியதை கடுமையாக விமர்சித்த வைகோஜெயலலிதாவின் அறிவிப்பை வரவேற்பாரா? அப்படியானால் அவருக்கு இதுசரியான மூக்கறுப்பாகும் என்று கூறினார் கருணாநிதி.

ராமதாஸ் தாக்கு:

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு ஒரு முதல்வர் இது போன்ற அறிவிப்பை வெளியிடுவது ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் செயலாகும். திமுக தனதுஅறிவிப்பை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது. ஆனால், ஜெயலலிதாவோ அதை ஒரு தெருவோரக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இந்த தேர்தல் விதிமீறலை தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.

ஜெயலலிதாவின் தோல்வி பயமும் இதன் மூலம் நிரூபணமாகிவிட்டது. இது திமுக கூட்டணிக்குக் கிடைத்த முதல் வெற்றி. 2001ல் ஆட்சிக்கு வந்தஜெயலலிதா தான் அரிசி விலையை உயர்த்தினார் என்பதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

ப.சிதம்பரம் கேள்வி:மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,

இரண்டு ரூபாய்க்கு எப்படி ஒரு கிலோ அரிசியைத் தர முடியும் என்று கேள்வி எல்லாம் கேட்டவர் ஜெயலலிதா? அவர் மட்டும் எப்படி இப்போது இலவசஅரிசியைத் தர முடியும்?. திமுக தேர்தல் அறிக்கை மாநிலம் முழுவதும் ஏற்படுத்திய தாக்கத்தால் மிரண்டு போய் இந்த அறிவிப்பை ஜெயலலிதாவெளியிட்டுள்ளார். இது கருணாநிதிக்கு முதல் வெற்றி.

மிடாஸ் முறைகேடு: கருணாநிதி தாக்கு

இதற்கிடையே சசிகலாவின் ஆட்களுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபானத் தொழிற்சாலையின் முறைகேடுகாளால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்புஏற்பட்டுள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒரு மதுபான நிறுவனம் ஆண்டுக்கு இத்தனை பெட்டி மதுபானங்களைத் தான் தயாரிக்க வேண்டும் என்று அரசு வரைமுறை வைத்துள்ளது.

ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர்களால் நடத்தப்படும் மிடாஸ் மதுபான நிறுவனத்திற்கு இந்த வரைமுறை தளர்த்தப்பட்டுஆண்டுக்கு எத்தனை பெட்டிகள் வேண்டுமானாலும் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மதுபான நிறுவனங்கள் ஆண்டுக்கு எவ்வளவு எரிசாராயம் வாங்க வேண்டும் என்றும் நிர்ணயம் உள்ளது. இதுவும் மிடாஸ் நிறுவனத்துக்குத்தளர்த்தப்பட்டு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் சில்லறை மதுபான விற்பனையை அரசே எடுத்துக் கொண்ட பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மிடாஸ் நிறுவனத்தின் மது பான விற்பனை8 மடங்காக அதிகரித்துள்ளது.

மதுபான பாட்டில்கள் மீது ஒட்டப்படும் எக்ஸைஸ் லேபிள்கள் திமுக ஆட்சிக் காலத்தில் பலத்த பாதுகாப்புடன் அரசு அச்சகங்களில் அச்சிடப்படும்.

ஆனால் மிடாஸ் நிறுவனம் தனியார் அச்சகங்களில் எக்ஸைஸ் லேபிள்களை அச்சிட்டதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றுகூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+