வாக்குச் சாவடியில் செல்போனுக்கு தடை!
சென்னை:
வாக்குச் சாவடியைச் சுற்றிலும் 100 மீட்டர் சுற்றளவுக்கு செல்போன்களைப்பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:வாக்குச் சாவடியைச் சுற்றிலும் 100 மீட்டர் சுற்றளவில் செல்போன்கள், கார்டுலெஸ்போன்கள், ஒயர்லஸ் போன்களை பயன்படுத்தக் கூடாது. இந்த போன்களை கொண்டுவரவோ, பயன்படுத்தவோ கூடாது.
வாக்குச் சாவடிக்குள்ளும் இந்த போன்களை பயன்படுத்தக் கூடாது, கையில்வைத்திருக்கவும் கூடாது. இதை மீறி யாராவது செல்போன் உள்ளிட்டவற்றை கையில்வைத்திருந்தால் அதை பாதுகாப்புப் பொறுப்பில் உள்ளவர்கள் அவற்றைப் பறிமுதல்செய்து விடுவார்கள்.
வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அதைச் சுற்றிலும் 100 மீட்டர் சுற்றளவுக்குதேர்தல் பணிகள் தொடர்பான அதிகாரிகள் மட்டுமே செல்போன் உள்ளிட்டவற்றைபயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
அவர்களைத் தவிர வேறு யாரும் இக்கருவிகளை பயன்படுத்தக் கூடாது என்று அந்தஅறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications