வயிற்றில் ரூ.40 லட்சம் ஹெராயின்-வாலிபர் கைது
சென்னை:
ரூ. 40 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை பிளாஸ்டிக் கவரில்மாத்திரைகள் வடிவில் விழுங்கி கடத்த முயன்ற வாலிபரை போலீஸார் கைதுசெய்தனர்.
மன்னார்குடியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் கொழும்பு செல்வதற்காக சென்னைவிமான நிலையத்திற்கு வந்தார். அவரது பாஸ்போர்ட்டை சோதித்த சுங்கத் துறைஅதிகாரிகள், அவர் அடிக்கடி கொழும்பு சென்று வந்ததைப் பார்த்துசந்தேகமடைந்தனர்.
சுரேசின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் குடுவைகளுடன் சுங்கத்துணை ஆணையர் ராஜன் |
அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப்பேசினார். இதைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியபோது, உண்மையைக்கக்கினார் சுரேஷ்.
ஹெராயின் போதைப் பொருளை மாத்திரை வடிவில் பிளாஸ்டிக் கவரில் போட்டுஅதை விழுங்கியிருப்பதாக விசாரணையின்போது சுரேஷ் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சுரேஷை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சுங்கத்துறைஅதிகாரிகள் அழைத்துச் சென்று ஸ்கேன் எடுத்துப் பார்த்தனர்.
அப்போது அவரது வயிற்றில் பாலிதீன் உறைக்குள் அடங்கிய ஏராளமானமாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து மாத்திரைகளை வெளியேஎடுத்தனர். மொத்தம் 80 மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டன.
ஒவ்வொரு மாத்திரையிலும் மூன்றரை முதல் நான்கு கிராம் எடையுள்ள ஹெராயின்இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 40 லட்சம் ஆகும்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.