ஐஜி ஆனார் ஜெ வழக்கை விசாரித்த துக்கையாண்டி
சென்னை:
ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை விசாரித்து, அதிமுக ஆட்சியில்ஓரங்கட்டப்பட்ட டிஐஜி துக்கையாண்டிக்கு ஐஜியாக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது.
ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க 1997ம் ஆண்டில் திமுகஆட்சியில் துக்கையாண்டி நியமிக்கப்பட்டார். நேர்மைக்குப் பேர் போனதுக்கையாண்டியும் அரசியல் நெருக்கடிகளைத் தாண்டி விசாரணையை நடத்தினார்.
ஜெவால் பழிவாங்கப்பட்டவர்:
இந் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. டிஐஜி அதிகாரத்தில் இருந்த காவல்துறைஅதிகாரியான துக்கையாண்டியைத் தூக்கி நாகர்கோவில் அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகத்தின் கண்காணிப்பு அதிகாரியாக நியமித்து தனது கோபத்தைத்தீர்த்துக் கொண்டார் ஜெயலலிதா.
இந் நிலையில் இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால்துக்கையாண்டிக்கும் நல்ல காலம் பிறந்துள்ளது.
![]() |
| துக்கையாண்டி (வலது புறம் சல்யூட் அடிப்பவர்) |
அவருக்கு ஐஜியாக பதவி உயர்வு அளித்துள்ள முதல்வர் கருணாநிதி, அவரைசென்னை குற்றப் பிரிவு ஐ.ஜியாக நியமித்துள்ளார். இதன் மூலம் அதிமுக ஆட்சிகாலஊழல் வழக்குகளை அவர் மீண்டும் தோண்டியெடுக்கும் பதவிக்கு வந்துள்ளார்.
மத்திய உளவுப் பிரிவு:
அதே போல சென்னையில் உள்ள மத்திய உளவுப் பிரிவில் தமிழக அதிகாரியாகஉள்ள துணை இயக்குனர் டிஐஜி ஆசிஷ் பங்காராவுக்கு ஐ.ஜியாக பதவி உயர்வுஅளிக்கப்பட்டுள்ளது.
அவர் தொடர்ந்து அதே பணியில் தொடர்வார்.
உளவுத்துறைக்கு புதிய எஸ்பி:அதே போல வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு போலீஸின் 3வது பட்டாலியன்கமாண்டன்ட்டாக உள்ள சந்திரசேகர் மாநில உளவுப் பிரிவு சிறப்பு எஸ்.பியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
க்யூ பிராஞ்சில் டேவிட்சன்:
மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் டேவிட்சன் ஆசிர்வாதம்,இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை கியூ பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
அப்பொறுப்பில் இருந்து வந்த சசிகலா சாய்ஸ் அதிகாரியான கந்தசாமி, சென்னைநிர்வாக உதவி ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications