ஊர்க்காவல் படை எஸ்.பியான சிவனாண்டி!!
சென்னை:
அதிமுகவின் முன்னணித் தலைவராக படு தீவிரமாக பணியாற்றி தேர்தல்ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட, டிஐஜி சிவனாண்டி திருச்சிஊர்க்காவல்படை எஸ்.பியாக மகா டம்மி பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதிமுகவுக்கு ஆதரவாக உளவுப் பிரிவை முழுமையாக உபயோகப்படுத்தியவர்,சசிகலாவின் ஆதரவாளரான சிவனாண்டி.இவரது தீவிர விசுவாசத்தைப் பார்த்த அதிமுக அரசு, சிவனாண்டியை சீனியாரிட்டிபட்டியலில் படு வேகமாக முன்னுக்குக் கொண்டு வந்து அவரை டிஐஜியாகஉயர்த்தியது.
இதை எதிர்த்து சென்னை மத்திய தீர்ப்பாயத்தில் சில எஸ்.பிக்கள் வழக்குதொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் சிவனாண்டிக்குத் தரப்பட்டசீனியாரிட்டியை ரத்து செய்தது.
இந் நிலையில் உளவுத்துறை டிஐஜி பொறுப்பில் இருந்து வந்த சிவனாண்டியைதேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது.
தற்போது திமுக ஆட்சி வந்துள்ள நிலையில் சிவனாண்டி மீண்டும் எஸ்.பியாக பதவிகுறைப்பு செய்யப்பட்டுள்ளார்.
அவரை திருச்சி ஊர்க்காவல் படையின் எஸ்.பியாக நியமித்து உள்துறைச் செயலாளர்பவன் ரெய்னா உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை சிவப்பு விளக்கு சுழல, உளவுப் பிரிவு போலீசாரின் வாகனங்கள் தொடரஏசி கார்களில் சுற்றி வந்த சிவனாண்டிக்கு இனிமேல் ஜீப் தான் வண்டி.












Click it and Unblock the Notifications