ராஜராஜன் சிலைக்கும் விமோசனம்: பாஜக
சென்னை:
தஞ்சை பெரிய கோவிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜராஜன்சிலையை கோவில் வளாகத்திற்குள் நிறுவ முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக தேசிய துணைத் தலைவர் இல.கணேசன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இல.கணேசன் விடுத்துள்ள அறிக்கையில்,ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றுள்ள கருணாநிதியை நேரில் சந்தித்துஎனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். மாநிலப் பொதுச் செயலாளர்மோகன்ராஜுலுவும் என்னுடன் இருந்தார்.
முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள கருணாநிதியை அரசியல் நாகரீகம் கருதி வாழ்த்தச்சென்றிருந்தேன். அப்போது, தலமைச்சர் மீண்டும் கண்ணகி சிலையை நிறுவ ஏற்பாடுசெய்வது குறித்து எனது மகிழ்ச்சியையும், ஆதரவினையும் தெரிவித்தேன்.
திமுக மத்தியிலும் ஆட்சியில் பங்கு வகிக்கின்றது. அந்த செல்வாக்கினைப்பயன்படுத்தி, தஞ்சையில் பெரிய கோவிலுக்கு வெளியே கவனிப்பாரற்று நிற்கும்ராஜராஜன் சிலையை கோவில் வளாகத்திற்குள் வைக்கவும், உரிய நடவடிக்கைஎடுக்குமாறு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தேன்.
பெரிய கோவிலின் நுழைவாயிலை கடந்த பிறகு உள்ள பரந்த இடத்தில் வாகனங்கள்நிறுத்தப்படுகின்றன. பூஜை பொருட்கள் விற்கப்படுகின்றன. ஏன் மிதியடிபாதுகாக்கும் இடம் உள்ளது. அந்த இடத்தில் மையமாக தென்புறத்தில் வடக்குநோக்கி ராஜராஜன் நிற்பது போல அமைவது பொருத்தமானதாகும்.
எனது கருத்தினை பரிசீலனை செய்வதாக கனிவுடன் முதலமைச்சர் தெரிவித்தார் என்றுகூறியுள்ளார் இல.கணேசன்.