அவினாசி-ஆட்டோ மீது லாரி மோதி 6 பேர் பலி
அவினாசி:
கோவை மாவட்டம் அவினாசி அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதில் 6 பேர்பரிதாபமாக இறந்தனர்.
துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியைச் சேர்ந்த 16 பேர் மினி டோர் சரக்குஆட்டோ மூலம் ஈரோடு மாவட்டம் செங்கம்பள்ளி பகுதியில் உள்ள தங்களது குலதெய்வத்தை வழிபடச் சென்றனர். ஆட்டோவை மனோகரன் என்பவர் ஓட்டினார்.கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு இரவு தங்களது ஊருக்குக் கிளம்பினர். கனமழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டோவில் அமர்ந்திருந்தவர்கள் தார்ப்பாய்போட்டு தங்களை மூடிக் கொண்டு ஆட்டோவில் அமர்ந்திருந்தனர்.
அவினாசி அருகே உள்ள முண்டியம்கிணறு பகுதியில் ஆட்டோ வந்தபோது,முன்னால் சென்ற லாரி ஒன்று திடீரென பிரேக் அடித்தது.
இதனால் நிலை தடுமாறிய ஆட்டோ டிரைவர் வேகத்தைக் குறைத்தார். அப்போதுஆட்டோவுக்குப் பின்னால் வந்த தவிடு ஏற்றி வந்த லாரி படு வேகத்தில் ஆட்டோ மீதுபயங்கரமாக மோதியது.
இதில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் மணி, ராஜகோபால்,சுப்ரமணி, தங்கமணி, ராமமூர்த்தி, குழந்தைவேல் ஆகிய ஆறு பேரும் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களில் சகுந்தலா என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications