தமிழர்கள் படுகொலையில் கடற்படை கைவரிசை: ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் கடும் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் தமிழர் பகுதியில் நடந்த படுகொலைகளில் இலங்கை கடற்படை மற்றும் ஈடிபிடி போராளிகளின்கைவரிசை உள்ளதாக சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் கூறியுள்ளது.
![]() |
| படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கும் குடும்பம் |
யாழ்பாணம் அல்லைபிட்டி, ஊர்காவாற்றுறைப் பகுதியில் இரண்டு குழந்தைகள் உள்பட 13 பேரை வெட்டியும்சுட்டும் கொன்றுள்ளது இலங்கை கடற்படை. தூங்கிக் கொண்டிருந்தபோது இவர்கள் கொல்லப்பட்டனர்.
இச் சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த கொடூரமான தாக்குதலுக்கு இலங்கைகடற்படையும் ஈபிடியும் காரணமாக இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஆம்னெஸ்டிஇன்டர்நேசனல் கூறியுள்ளது.
கொலைகள் நடந்த இடத்தில் கடற்படை மற்றும் ஈபிடியினர் இருந்துள்ளது தெரியவந்துள்ளதாகவும், இது போன்றகொலைகளில் இலங்கை அரசின் விசாரணை முழுமையாக இல்லை என்றும் கூறியுள்ளது.













Click it and Unblock the Notifications