5 சசி ஆதரவு எஸ்பிக்களின் பணி நீட்டிப்பு ரத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக ஆட்சிக்காலத்தில் பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்ட 5 காவல்துறைக்கண்காணிப்பாளர்களின் பணி நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டு உடனடியாக வீட்டுக்குஅனுப்பப்பட்டனர்.

திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், நிர்வாக சீர்திருத்தங்கள் தொடங்கியுள்ளன.அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஓய்வு பெற்ற பின்னரும் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பி வருகிறது திமுக அரசு.

அந்த வகையில், சட்டசபை செயலாளராக பணி நீட்டிப்பில் இருந்து வந்த ராஜாராமன்நீக்கப்பட்டார். தற்போது ஐந்து காவல்துறைக் கண்காணிப்பாளர்களின் பணி நீட்டிப்புரத்து செய்யப்பட்டுள்ளது.

கியூ பிரிவு எஸ்.பி. கந்தசாமி, சென்னை கோட்டை பாதுகாப்பு பிரிவு துணைஆணையர் ஜெயச்சந்திரன், தூத்துக்குடி போலீஸ் பயிற்சிக் கல்லூரி முதல்வர்பரசுராமன், சென்னை ஆயுதப்படை துணை ஆணையர் ஆசிர்வாதம், லஞ்ச ஒழிப்புஎஸ்.பி. செளந்தரராஜன் ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னரும் பணி நீட்டிப்பு பெற்றுபணியில் இருந்து வந்தனர்.

இந்த 5 பேருமே தனது சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பணி நீட்டிப்பு கிடைக்க வழிசெய்தார் சசிகலா.

இவர்களுக்கு பணி நீட்டிப்பு நேற்று மாலை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஐந்துபேரும் விடைபெற்று வீட்டுக்குச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+