டிவி நடிகை ஷ்ரத்தா தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரபல டிவி டிவி நடிகை ஷ்ரத்தா விஸ்வநாதன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த விஸ்வநாதன்-சுபத்ராவின் இளைய மகள் ஷ்ரத்தா. இவர் எதிர்நீச்சல் என்றடிவி தொடர் மூலம் சின்னத் திரையில் நுழைந்தவர்.

Sharatha
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த விஸ்வநாதன்-ஷம்ராவின் இளைய மகள் ஷ்ரத்தா. இவர் எதிர்நீச்சல் என்றஅதைத் தொடர்ந்து கோலங்கள், கல்கி ஆகிய தொடர்களில் நடித்து வந்தார். ஜெயா டிவியில் டாப் 10நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். போஸ் படத்திலும் சிறு வேடத்தில் ஷ்ரத்தாநிடித்துள்ளார்.

கோலங்களில் அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடித்து வந்தார். பெற்றோருடன் அடுக்குமாடிக்குடியிருப்பில் வசித்து வந்த ஷ்ரத்தா பயோ டெக்னாலஜி படித்துக் கொண்டே நடித்துவந்தார்.

இவருக்கு ஷ்ரேயா என்ற தங்கை உண்டு. ஷ்ரேயா கோடை விடுறைக்காககொல்கத்தாவில் உள்ள உறவினர் வீட்டுக்குப் போய் விட்டார். வீட்டில் ஷ்ரத்தாவும்,அவரது பெற்றோரும் மட்டும் உள்ளனர். இன்று காலை ஷ்ரத்தா நீண்ட நேரமாகியும்அவரது அறையிலிருந்து வெளியே வராததால், அவரது தாயார் சுபத்ரா கதவைத்தட்டினார்.

அப்போது கதவு திறந்து கொள்ளவே, உள்ளே மின் விசிறியில் தூக்கு மாட்டி ஷ்ரத்தாதற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

கட்டில் அருகே ஷ்ரத்தா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. சுத்தமானஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில்,

அப்பா, அம்மாவுக்கு, உங்களை நான் மிகவும் மன வருத்தம் அடையச் செய்துவிட்டேன். உங்கள் மகளாக இருப்பதற்கு எனக்கு அருகதை இல்லை. என்னைமன்னித்து விடுங்கள், எனது சாவுக்கு நானே காரணம். எனக்கு இந்த உலகத்தில் வாழப்பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை, என்னை யாரும்தற்கொலைக்குத் தூண்டவும் இல்லை என்று எழுதி வைத்துள்ளார்.

Sharatha
சற்று முன்கோபியான ஷ்ரத்தா, வீட்டில் பிரச்சனை வரும்போதெல்லாம் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று மிரட்டி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நடிப்பா, படிப்பா என்பது குறித்து ஷ்ரத்தா குழப்பிக் கொண்டிருந்ததாகவும்,அதுகுறித்து அவரது தந்தை கண்டிப்பான சில அறிவுரைகளைக் கூறியதால் மனம்உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேசமயம்,காதல் தோல்வி என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

ஷ்ரத்தா கண் தானம் செய்திருந்ததால் அவரது கண்கள் அகற்றப்பட்டுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னர் உடல் பிரேதப்பரிசோதனை நடந்தது.

டிவி நடிகை வைஷ்ணவியின் தற்கொலையே இன்னும் மறக்கப்படாத நிலையில் அடுத்த டிவி நடிகையும்தற்கொலை செய்து கொண்டுள்ளது சின்னத் திரை நடிகைகள் வட்டாரத்தில் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.வைஷ்ணவிக்கு முன் நடிகை ஷாலினி தற்கொலை செய்து கொண்டது நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+