தா.கியின் தம்பி மகனை கொல்ல முயற்சி

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை:

மதுரையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணனின்நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய அவருடைய தம்பி மகனைகத்தியால் குத்திக் கொல்ல முயற்சி நடந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார்.

கடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த தா.கிருட்டிணன், மதுரையில் கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் படுகொலை செய்யப்பட்டார். திமுக கோஷ்டிமோதலில் அவர் கொலை செய்யப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.

இதுதொடர்பாக அழகிரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந் நிலையில் சிவகங்கை மாவட்டம் கொம்புக்காரனேந்தல் கிராமத்தில் உள்ளதா.கியின் நினைவிடத்தில் அவரது 3வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடந்தன.இந்த நிகழ்ச்சியில் தா.கியின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சையிலிருந்து வந்திருந்த உறவினர்கள், நினைவு நாள் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு ஊருக்குக் கிளம்பினர்.

அவர்களுடன் தா.கிருட்டிணனின் தம்பி ராமையாவின் மகன் நெடுஞ்செழியனும்உடன் சென்றார். நெடுஞ்செழியனுக்கு கொலை மிரட்டல் இருப்பதால் அவருக்குபாதுகாப்பாக 3 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் நெடுஞ்செழியன் சென்று கொண்டிருந்தனர். முத்தனேந்தல் விலக்குஎன்ற இடத்தில் அவர்கள் வந்தபோது, கள்ளச்சாராய வியாபாரியான நல்லுச்சாமிஎன்பவர் அங்கு வந்தார்.

நெடுஞ்செழியன் மீது பாய்ந்த அவர் கத்தியால் அவரைக் குத்திக் கொல்லமுயற்சித்தார். இதையடுத்து அருகில் இருந்த காவலர் செந்தில்குமார் சுதாரித்துக்கொண்டு துப்பாக்கியால் நல்லுச்சாமியை சுட்டார்.

இதில் நல்லுச்சாமியின் தோளில் குண்டு பாய்ந்தது. நல்லுச்சாமி தாக்கியதில்காவலர்கள் 3 பேரும் காயமடைந்தனர்.

காயமடைந்த நல்லுச்சாமி மற்றும் காவலர்கள் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+