சிபிஎஸ்சி: தேசிய அளவில் சென்னை முதலிடம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் 79.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 91.46 சதவீதம் தேர்ச்சி பெற்று தேசிய அளவில் சென்னை மண்டலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.இந்த ஆண்டும் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவிகள் 84.41 சதவீதமும், மாணவர்கள் 75.93 சதவீதமும் வெற்றி பெற்றுள்ளனர்.
மாணவிகள் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னையைத் தொடர்ந்து அஜ்மீர், சண்டீகர், டெல்லி, அலகாபாத் மற்றும் கெளஹாத்தி மண்டலங்கள் அதிகஅளவில் தேர்ச்சி பெற்றுள்ளன.
இதில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 92.89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உடல் ஊனமுற்ற 3 மாணவர்கள் 90 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். கண்பார்வையற்ற மாணவியான அஸ்தா குப்தாவும் 90.7 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications