ஜெவுக்கு உயர் மட்ட பாதுகாப்பு -தமிழக அரசு
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு எந்த விதத்திலும் தளர்த்தப்படவோகுறைக்கப்படவோ இல்லை என தமிழக அரசு கூறியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோ பாதுகாப்பும் தொடர்ந்துகொண்டு தான் உள்ளது. இது தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகினறன.ஜெயலலிதாவின் வீட்டில் போலீசார் தவிர 2 தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் 24 மணி நேர பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக போலீஸ் படையின் 2 வாகனங்களும் தேசிய கமாண்டோக்களின் ஒருவாகனமும் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக தரப்பட்டுள்ளன.
மொத்தத்தில் அவரது வாகன அணி வரிசைக்கு 4 வாகனங்கள் பாதுகாப்பு தருகின்றன. மொத்தம் 55அதிகாரிகளும் போலீசாரும் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளில்ஈடுபட்டுள்ளனர்.
இதைத் தவிர ஜெயலலிதா வெளியில் சென்றால் போதிய பாதுகாப்பு அளிக்க கமிஷ்னர்கள், எஸ்பிக்களுக்கும்உத்தரவு போடப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுரதாவுக்கு கருணாநிதி உதவி:
இந் நிலையில் அரசு வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,
முதல்வர் கருணாநிதியை, உவமைக் கவிஞர் சுரதாவின் குடும்பத்தினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, சுரதாவின் உடல் நலக்குறைவினைக் கருத்தில் கொண்டு அவரது மருத்துவச் செலவுக்கு தமது சொந்தப் பொறுப்பிலிருந்து ரூ. 50,000 நிதியுதவியைகருணாநிதி அனுப்பி வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.