ஜூன் 26ல் பிளஸ் டூ சிறப்புத் தேர்வு
சென்னை:
பிளஸ் டூ தேர்வில் மூன்று பாடங்கள் வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு பொதுத் தேர்வு ஜூன்26ம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொது தேர்வில் பள்ளி மாணவர்களாக தேர்வு எழுதியவர்கள் அவர்களது பள்ளிதலைமை ஆசிரியரிடம் விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அதேபள்ளியில் கொடுக்க வேண்டும்.தனித்தேர்வு எழுதியவர்கள், தேர்வு எழுதிய அதே மையத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அதே மையத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்ப மனுவில் மனுதாரர் பயின்றபள்ளித் தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்று மதிப்பெண் சான்றிததழ் நகலையும் இணைத்து ஜூன் 1 ம்தேதிக்குள் கொடுக்க வேண்டும்.
சென்னை அரசுத் தேர்வு இயக்கம், திருநெல்வேலி, மதுரை,கோவை, திருச்சி, கடலூர், மற்றும் வேலூர், அரசுத்தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களிலும், அனைத்து முதன்மை கல்வி அலுவகலங்கள்,அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள், பாண்டிச்சேரி இணை இயக்குநர் அலுவலகம் அகிய இடங்களில்வரும் 29 ம் தேதி முதல் ஜூன் 1 ம் தேதி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும்.
ஒரு பாடத்துக்கு கட்டணம் ரூ. 85ம் இரண்டு பாடங்களுக்கு ரூ. 135ம், மூன்று பாடங்களுக்கு ரூ.185 வீதமும்கட்டணம் செலுத்த வேண்டும்.
ஜூன் 1 ம் தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பாடது என அரசுத் தேர்வு இயக்குனர்டி.ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications