அதிமுக போட்ட அவதூறு வழக்குகள் வாபஸ்!
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டஎதிர்க்கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் வாபஸ்பெறப்படும் என விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சிவபுண்ணியம் பேசுகையில்,கடந்த அதிமுக ஆட்சியில் காவிரிப் பாசன மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள்வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து பேசியதற்காக நல்லகண்ணு உள்ளிட்ட தலைவர்கள் மீது கடந்த அதிமுகஆட்சி அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தது. அந்த வழக்குகள் தற்போது தள்ளுபடிசெய்யப்படுமா என்று கேட்டார்.
இதற்குப் பதில் அளித்த விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்,
காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆட்சியின்போது ஏராளமான பட்டினிச் சாவுகள்நடந்தன. பல விவசாயிகள் வறுமை தாங்க முடியாமல் தற்கொலையும் செய்துகொண்டனர். இது நாடறிந்த உண்மை.
எனவே இதுதொடர்பாக தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும்வாபஸ் பெறப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications