ஓஸ்லோ பேச்சு- பங்கேற்க புலிகள் சம்மதம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் அமைதிக் கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து நார்வே தலைநகர் ஓஸ்லோவில்பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப் புலிகள் சம்மதம் தெரித்துள்ளனர்.

இலங்கை அமைதிக் கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகள் குறித்து அடுத்த மாதம் ஓஸ்லோவில் பேச்சு நடத்தவருமாறு நார்வே விடுத்த கோரிக்கையை எங்களது தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது என புலிகளின் அரசியல்பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார்.

ஜூன் 8,9ம் தேதிகளில் நடக்கும் இந்தப் பேச்சுக்களில் இலங்கை அரசும் பங்கேற்க வேண்டும் என நார்வேகூறியுள்ளது. இது தொடர்பாக அரசு இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை.

இது அமைதிப் பேச்சுவார்த்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைதிக் கண்காணிப்புக் குழுவின்நடவடிக்கைகள் குறித்து மட்டுமே பேசப்படவுள்ளது.

அதே போல ஓஸ்லோ செல்லும் புலிகளின் குழுவின் பயண, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. இது தொடர்பான நடவடிக்கைகளை நார்வே நாடே மேற்கொள்ளவுள்ளதாக தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

அமைதிக் கண்காணிப்புக் குழுவில் நார்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாட்டுபிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+