திருப்பதியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி சிலை
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கர்நாடக சங்கீத மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின்சிலை திறந்து வைக்கப்பட்டது.
எம்.எஸ். என்று அன்புடன் அழைக்கப்படும் சுப்புலட்சுமி மதுரையில் பிறந்தவர். சிறுவயதிலேயே சென்னைக்கு வந்து விட்ட அவர் கர்நாடக இசையில் மிகச் சிறந்தபாடகியாக திகழ்ந்தார். சில படங்களிலும் அவர் நடித்துள்ளார்.இசைக் குயில் என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட எம்.எஸ். கடந்த 2004ம்ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி இறந்தார்.
பாரதரத்னா விருதைப் பெற்றுள்ள சுப்புலட்சுமிக்கு திருப்பதியில் முழு உருவச் சிலைஉருவாக்கப்பட்டது.
14 அடி உயரம் கொண்ட, எம்.எஸ். கையில் தம்புராவுடன் உட்கார்ந்திருப்பது போலவடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை மொத்தம் 4,000 கிலோ எடை கொண்டதாகும்.
வெண்கலத்தில் வடிக்கப்பட்டுள்ள இந்த சிலையை ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டிதிறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications