கன்னியாகுமரியில் கன மழை-மதுரையில் சூறாவளி பவானியில் வெள்ள அபாய எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதன் எதிரொலியாக கன்னியாகுமரிமாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.

கேரளாவிலும், கர்நாடகத்தின் தென்கோடிப் பகுதியிலும் தென் மேற்கு பருவ மழைதொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளதமிழகப் பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கோவை மாவட்டம் ஆகியவற்றில் கேரளாவை ஒட்டியுள்ளபகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இன்றுஅதிகாலையும் பலத்த மழை பெய்தது.

இதேபோல கோவையிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பில்லூர்அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

கேரளாவை ஒட்டியுள்ள சேர்வலாறு அணையில் ஒரே நாளில் 8 அடிக்கு அணையின்நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சிநிலையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே மதுரையில் பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் நகரின் பலபகுதிகளிலும் மின் கம்பங்கள், மரங்கள் கீழே விழுந்தன. ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் மதுரையில் வெயில் அதிகம் இல்லை. வானம் மப்பும், மந்தாரமுமாக உள்ளது.

பிற்பகலுக்கு மேல் பலத்த சூறாவளிக் காற்று வீசியது.

காற்று படு வேகமாக சுழன்று சுழன்று அடித்ததால் பல இடங்களில் மரங்கள் வேரோடுவிழுந்தன. சில இடங்களில் மின்கம்பங்கள் கீழே விழுந்து மின் வினியோகம்துண்டிக்கப்பட்டது.

பலத்த சூறாவளி மற்றும் புழுதிக் காற்றினால், சாலைகளில் வாகனங்களில்சென்றவர்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளானார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+