கூட்டணி ஆட்சி: விரைவில் முடிவு-இளங்கோவன்
கும்பகோணம்:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து சோனியா காந்தியும், கருணாநிதியும் விரைவில் முடிவை அறிவிப்பார்கள்என மத்திய இணையமைச்சர் இளங்கோவன் கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,தமிழகத்தில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். திமுகவினரை ஜெயலலிதா காட்டுமிராண்டிகள்என்றார். ஆனால், சட்டசபையில் முதல் நாளே அதிமுக ரகளையில் ஈடுபட்டது. இதிலிருந்து காட்டுமிராண்டிகள்யார் என்று தெரிகிறது.
ஜெயலலிதா சட்டசபைக்குச் சென்று தனது பேச்சால் வன்முறையை ஏற்படுத்த நினைத்தார். ஆனால், அதைமுதல்வர் கருணாநிதி தனது திறமையால் தவிர்த்துவிட்டார்.
வன்முறையில் ஈடுபடுவதால் இழந்த செல்வாக்கை அதிமுக பெற்றுவிட முடியாது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து சோனியா காந்தியும், கருணாநிதியும் விரைவில் முடிவை அறிவிப்பார்கள்.வாரியத் தலைவர் பதவிகளை காங்கிரசுக்குக் கொடுத்தால், நாங்கள் என்ன வேண்டாம் என்றா சொல்லப்போகிறோம்.
அதிமுகவுக்கு முட்டை தான்: வாசன்
இதற்கிடையே சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியஅமைச்சர் வாசன்,
கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் அரசாக ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி ஆட்சி திகழும்.
சட்டசபையில் முதல் நாளே அதிமுவினர் ரகளை மற்றும் வன்முறையில்ஈடுபட்டுள்ளனர். இப்படியே அவர்கள் தொடர்ந்து நடந்து கொண்டால் வருகிறஉள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதத் தோல்வியையே மக்கள் தருவார்கள்.
இதை உணர்ந்து அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications