சென்னையில் 15 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
சென்னை:
சென்னையில் 15 இன்ஸ்பெக்டர்கள் ஒரே நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டடுள்ளனர்.
சென்னை மதுரவாயல் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன், நுங்கம்பாக்கம் சட்டம் ஒழுங்குஇன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த சுரேஷ், வேலூர் சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.ஜெ.ஜெ நகர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சுப்பையா, திரு.வி.க நகர் சட்டம் ஒழுங்குப் பிரிவுக்குமாற்றப்பட்டார். இந்த பதவியில் இருந்த தர்மலிங்கம் ஜெ.ஜெ நகர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அம்பத்தூர் சட்டம்-ஒழுங்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், யானைக்கவுனி போக்குவரத்துவிசாரணைப் பிரிவுக்கும், அந்த பதவியில் இருந்த கிருஷ்ணமூர்த்தி அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவுக்குமாற்றப்பட்டுள்ளனர்.
அமைந்தகரை காவல் நிலைய குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் நந்தகுமார், அம்பத்தூர் எஸ்டேட் சட்டம்-ஒழுங்குப்பிரிவுக்கும், அந்த பதவியில் இருந்த செல்வமணி, அமைந்தகரை குற்றப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்கரை சட்டம் ஒழுங்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் சாம் ராஜதுரை, அதே காவல் நிலைய குற்றப்பிரிவுக்கும், அந்த பிரிவில் இருந்த ராஜேந்திரன், அதே காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கும்மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் நுங்கம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், விருகம்பாக்கம்சட்டம்-ஒழுங்குப் பிரிவுக்கும், அந்தப் பதவியில் இருந்த சந்திரசேகர், நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும்மாற்றப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications