மாஜி மந்திரி அனிதாவை கைது செய்ய பிடிவாரண்ட்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
போலி வாக்காளர்களை சேர்த்த முன்னாள் அதிமுக அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் போலி வாக்காளர்களை சேர்த்ததாக அனிதாராதாகிருஷ்ணனன் மீது தூத்துக்குடி 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் 3 வழக்குகள்தொடரப்பட்டுள்ளன.இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு அனிதா ராதாகிருஷ்ணனை ஆஜராகுமாறுகூறி நேரிலும், தபால் மூலமும் சம்மன் அனுப்பியும் அவர் வரவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் அனிதாஆஜராகவில்லை.
இதையடுத்து நீதிபதி மதி, அனிதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறுகூறி போலீஸாருக்கு உத்தரவிட்டார். அடுத்த கட்ட விசாரணை ஜூன் 30ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications