டீசல் விலை உயர்ந்தால் ரயில் கட்டணம் குறைப்பு!
டெல்லி:
பெட்ரோல், டிசல் விலை உயரப் போகும் நிலையில் பயணிகளின் கட்டணத்தை குறைக்கவும், பயணிகளுக்கு பலசலுகைகள் அளிக்கவும் ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,கட்டண குறைப்பு தொடர்பான அனைத்து விளம்பரங்களும் தயாராகி விட்டன. அமைச்சர அதில் கையொப்பமும்போட்டு விட்டார். மத்திய அரசு டீசல் விலையை உயர்த்துவதாக அறிவித்தவுடன் எங்களது விளம்பரங்கள்பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும்.
தற்போது ரயில்வேயில் பணப்புழக்கம் தாராளமாக உள்ளது. இதனால் டீசல் விலை உயர்வை சுலபமாக சமாளிக்கமுடியும். இந்த ஆண்டு எரிபொருளுக்காக ரூ. 52,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைகாட்டிலும் ரூ. 5,000 கோடி அதிகம்.
ரயில்வேயின் ஒட்டு மொத்த மதிப்புடன் ஒப்பிடும் போது இந்த செலவு 1 சதவீதம் மட்டும் தான் என்றார்.
டீசல் விலை உயர்வை அறிவிக்கும்போது ரயில் கட்டண குறைப்பை அறிவித்து கவனத்தை தன் பக்கமாக ஈர்க்கமுடிவு செய்துள்ளார் லாலு. சமீப காலமாக பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமலேயே ரயில்வே துறையில்வருமானத்தை பல மடங்கு அதிகரித்துக் காட்டியுள்ளார் லாலு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications