நாங்குநேரியில் இலவச கலர் டிவி தயாரிப்பு தொழிற்சாலை: கருணாநிதி
டெல்லி:
நாங்குநேரியில் அமையவுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கலர் டிவிதயாரிப்புத் தொழிற்சாலை அமைக்கப்படும். திமுக அரசு வழங்கவுள்ள இலவச கலர்டிவி இங்குதான் தயாரிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள கருணாநிதி இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்தார். இரு தலைவர்களும் சுமார் முக்கால் மணி நேரம் பேசினர்.சந்திப்பின்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் கூடவே இருந்தார்.சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி பெயரில் விமான பயிற்சி மையம்அமைக்கப்படவுள்ளது. காங்கிரஸாரின் கோரிக்கையை ஏற்று இதுஅமைக்கப்படுகிறது. இதன் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வர வேண்டும் எனசோனியாவை அழைத்தேன். அவரும் வருவதாக சம்மதித்துள்ளார். விரைவில் தேதிஅறிவிக்கப்படும்.
சோனியா காந்தியுடன் தமிழக வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் ஆலோசித்தேன். திமுகஅமைச்சரவையில், காங்கிரஸ் கட்சி பங்கேற்பது குறித்து சோனியாவிடம் எதையும்விவாதிக்கவில்லை.
நாங்குனேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படுவதற்கான பணிகள்ஏற்கனவே தொடங்கி விட்டன. அங்கு கலர் டிவி தயாரிப்புத் தொழிற்சாலைதொடங்கப்படும். எங்களது அரசு வழங்கவுள்ள இலவச கலர் டிவியும் அங்குதான்தயாரிக்கப்படும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில், மதிமுக தற்போது இல்லை. எனவே அதுகுறித்துநான் சோனியாவுடன் பேசவில்லை என்றார் கருணாநிதி.
இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமையும் கருணாநிதி சந்தித்துப் பேசவுள்ளார்.
முன்னதாக முதல்வர் பதவியை ஏற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்றகருணாநிதியை விமான நிலையத்தில் திமுக மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள்வரவேற்றனர். டெல்லி வாழ் திமுக தொண்டர்கள், தாரை தப்பட்டை முழங்கஅவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், தமிழக அரசுஅறிவித்துள்ள புதிய திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியைக் கேட்போம்.அந்த்த திட்டங்களை நிறைவேற்ற பணமும் கேட்போம் என்றார்.
பின்னர் பழைய தமிழ்நாடு இல்லத்திற்குச் சென்று கருணாநிதி தங்கினார். ஜெயலலிதாஆட்சியில் பல கோடியில் கட்டப்பட்ட அதி நவீன புதிய தமிழ்நாடு இல்லத்துக்குகருணாநிதி செல்லவில்லை.
நாளை திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவுடன்ஆலோசனை நடத்தும் கருணாநிதி, தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறுகோரவுள்ளார்.