காய்தே மில்லத் பிறந்தநாள்- ஜெ, ஸ்டாலின், விஜய்காந்த் அஞ்சலி
சென்னை:
மறைந்த முஸ்லீம் லீக் தலைவர் காயிதே மில்லத்தின் 111வது பிறந்த நாளையொட்டிசென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டதலைவர்கள் மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்பின் 111 வது பிறந்த நாள் இன்றுகொண்டாடப்பட்டது. இதையொட்டி திருவல்லிக்கேணி பெரிய மசூதி வளாகத்தில்உள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் இன்று காலை ஜெயலலிதா மலர்ப்போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.ஜெயலலிதாவுடன் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செலவம், ஜெயக்குமார் மற்றும்திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், விசாலாட்சி நெடுஞ்செழியன்,வசனகர்த்தா லியாகத் அலிகான் உள்ளிட்ட அதிமுகவினரும் உடன் சென்றனர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, மொய்தீன் கான்,எஸ்.எம். உபையதுல்லா ஆகியோர் மலர்ப் போர்வை போர்த்தினர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும்நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் சார்பில் தலைவர் கிருஷ்ணசாமி, துணை மேயர் கராத்தே தியாகராஜன்,எம்.பி. ஜே.எம். ஆரூண், முனவர் பாட்சா உள்ளிடடோரும், பாமக சார்பில்ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும்,
விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தொல். திருமாவளவன், செல்வம், ரவிக்குமார்,இந்திய யூனியன் முஸ்லீம லீக் சார்பில் காதர் மொஹைதீன், தாவூத் மியாகான்(காயிதே மில்லத்தின் பேரன்) உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications