முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் திடீர் கைது
வேலூர்:
அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர்பாண்டுரங்கன் உள்ளிட்ட 45 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
பாண்டுரங்கன் எம்.எல்.ஏவாக உள்ள வேலூர் அருகே உள்ள அணைக்கட்டுதொகுதிக்குட்பட்ட ஒரு ஆரம்ப சுகாதார மையத்தின் சுற்றுச் சுவரில் ஜெயலலிதாவின்படம் வரையப்பட்டிருந்தது.இந்த படத்தை ஆரம்ப சுகாதார மையத்தின் ஊழியர்கள் இன்று காலை அழித்தனர்.
அப்போது அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த பாண்டுரங்கன், ஜெயலலிதாவின்படத்தை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களைத் தடுத்தார்.
முன்னாள் முதல்வரின் படம் அரசு கட்டடத்தின் சுவரில் இருக்கக் கூடாதுஎன்பதால்தான் அதை அழிப்பதாக ஊழியர்களும், அதிகாரிகளும் பாண்டுரங்கனிடம்கூறினர். ஆனால் பாண்டுரங்கன் அதை ஏற்கவில்லை.
ஜெயலலிதாவின் படத்தை அழிக்க விடாமல் ஊழியர்களை அவரும்,அதிமுகவினரும் தடுத்தனர். இதையடுத்து ஆரம்ப சுகாதார மைய அதிகாரிகள்போலீஸில் புகார் கொடுத்தனர்.
இதன் பேரில் போலீஸார் பாண்டுரங்கனையும், அவருடன் இருந்த 45 பேரையும்கைது செய்தனர்.
சட்டசபையில் காவல்துறை அதிகாரிகளுடன் மோதிய பாண்டுரங்கன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றதுநினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications